இந்த துளசி வேறு யாருமல்ல? சங்கராபரணம் திரைப்படத்தில் மஞ்சு பார்கவியின் மகனாக வந்த குழந்தை நட்சத்திரம் தான் துளசி. தனது குருவும், தெலுங்கு சினிமாவில் தன்னை அறிமுகப் படுத்தி வழிநடத்தியவருமான இயக்குனர் கே. விஸ்வநாத்தின் திரைப்பயணத்தின் நினைவாக அவரது மாபெரும் வெற்றி பெற்ற திரைக்காவியமான சங்கராபரணத்தின் பெயரிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றூம் இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிக் கலைஞர்களுக்கு விருதளிப்பதே சாலச் சிறந்ததென முடிவெடுத்ததாக துளசி தெரிவித்த்துள்ளார். ஏன் ஐந்து மொழிக் கலைஞர்களுக்கு விருதளிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு... கே.விஸ்வநாத் மதம், இனம், மாநிலம், மொழி எனும் எல்லைகளைக் கடந்து மேற்கண்ட ஐந்து மொழிப் படங்களிலும் தனது கலைச் சேவையை திறம்பட ஆற்றியவர். அவரது திரைப்பங்களிப்பை போற்றும் வகையில் அவரது திரைப்படத்தின் பெயரால் விருதளிக்கும் போது 5 மொழி கலைஞர்களுக்கும் விருதளிப்பதே பொருத்தமாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.