விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ரஜினி, கமல் கவலை அடைந்துள்ளார்கள்: கேளிக்கை வரி குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கேளிக்கை வரி என்பது உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கிடைக்கும் முக்கிய வருவாய் என்று அமைச்சர்...

News image
Updated On :6 ஜூலை 2017, 7:08 am

தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாள்களாக 1,200 திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருத்தணி முதல் கன்னியாகுமரி வரையில் மொத்தம் 1200 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் காலை, பிற்பகல், மாலை, இரவு என 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன. வார இறுதி நாள்களில் மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்படும். கடந்த 3-ம் தேதி முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு காலவரையற்ற போராட்டம் நடைபெறுகிறது.

சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது:

கேளிக்கை வரியால் திரைத்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஏராளமானோர் திரைத்துறையை நம்பி இருக்கிறார்கள். திரைத்துறை நலிந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் வரிவிதிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்று இரட்டை வரி விதிப்பை ரத்து செய்யவேண்டும். கேரளாவில் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே முதலமைச்சர் இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்றார். 

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் வேலுமணி, கேளிக்கை வரி என்பது உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கிடைக்கும் முக்கிய வருவாய். கேளிக்கை வரி விவகாரம் தொடர்பாக இன்று மாலையில் திரைத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.