மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

ஜிஎஸ்டி விவகாரம்: தமிழக அரசுக்கு ரஜினி வேண்டுகோள்!

தமிழ்த் திரையுலகினரின் கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலனை செய்யவேண்டும் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:21 pm

எழில்

தமிழ்த் திரையுலகினரின் கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலனை செய்யவேண்டும் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திரையரங்குகளுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசின் உள்ளாட்சி கேளிக்கை வரியும் திரையரங்குகளுக்கு கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 சதவீத கேளிக்கை வரி திரையரங்குகளுக்கு விதித்துள்ளது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில், தமிழகஅரசின் கேளிக்கை வரிக்கு தமிழ்த் திரை அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக 1,200 தியேட்டர்கள் காலவரையின்றி மூடுவதாக உரிமையாளர்கள் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேளிக்கை வரியை எதிர்த்து இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டதால் ரூ.35 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். திரையரங்குகள் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தெரிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறப்பட்டாலும், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதனால் போராட்டம் புதன்கிழமையும் (ஜூலை 5) தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளில் புதன்கிழமை (ஜூலை 5) அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஜினி ட்விட்டர் பக்கத்தில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தமிழ்த் திரையுலகை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு திரையுலகினரின் கோரிக்கையைப் பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.