ராம் இயக்கிய 3 படங்களிலும் முழுப் பாடல்களையும் எழுதியவர் மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார். தங்கமீன்கள் படத்துக்காக தேசிய விருதும் பெற்றார்.
நா. முத்துக்குமாரின் மறைவால் தற்போது ராம் - யுவன் - வைரமுத்து என்கிற புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது.
நா. முத்துக்குமார் மறைவுக்குப் பிறகு ராம் படங்களில் யார் பாடல் எழுதுவார் என்கிற கேள்வி அனைவரிடமும் எழுந்தது.
அதற்கு விடை தந்துள்ளது, சமீபத்தில் வெளியான பேரன்பு பட போஸ்டர். தற்போது வெளியாகியுள்ள இரு போஸ்டர்களிலும் படத்தின் பாடலாசியராக வைரமுத்துவின் பெயர் இடம்பெற்றுள்ளது.
மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா போன்றவர்கள் நடிப்பில் உருவாகிவரும் பேரன்பு படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா. ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர்.
ராம் படங்களில் பாடல் வரிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அதேபோல பேரன்பு படத்திலும் வைரமுத்துவுக்குச் சரியான வேட்டை காத்திருக்கும் என்று நம்பலாம்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


