சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

மறைந்த நகைச்சுவை நடிகர் அல்வா வாசு குடும்பத்துக்கு நடிகர் விஷால் நிதியுதவி!

தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலமாக மறைந்த நடிகர் அல்வா வாசு குடும்பத்துக்கு...

News image
Updated On :18 ஆகஸ்ட் 2017, 7:30 am

தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலமாக மறைந்த நடிகர் அல்வா வாசு குடும்பத்துக்கு நடிகர் விஷால் நிதியுதவி அளித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த பிரபல நகைச்சுவை நடிகர் அல்வா வாசு (54) மதுரையில் வியாழக்கிழமை இரவு மரணமடைந்தார். மதுரை முனிச்சாலை ருக்குமணிபாளையத்தைச் சேர்ந்தவர் நடிகர் வாசு (54). திரைப்படத்தில் உதவி இயக்குநராக மணிவண்ணனிடம் பணிபுரிந்தார். நடிகர் சத்தியராஜ் நடித்த அமைதிப்படை திரைப்படத்தில் நடித்த பாத்திரத்தால் அல்வா வாசு என அழைக்கப்பட்டார். பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்டோருடன் 900 படங்களுக்கும் மேலாக நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தொடர் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார். அவரது உடல்நலம் மிகவும் கவலைக்கிடமான நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை புதன்கிழமை முனிச்சாலையில் உள்ள வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அவர் மரணமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். அல்வா வாசு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை தமிழ் படித்துள்ளார். அவருக்கு அமுதா என்ற மனைவியும், 7-ஆம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலமாக மறைந்த நடிகர் அல்வா வாசு குடும்பத்துக்கு நடிகர் விஷால் ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.