சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

ட்விட்டரில் மெர்சல் படத்துக்குக் கிடைத்த புதிய அங்கீகாரம்!

ட்விட்டரில் உள்ள விஜய் ரசிகர்கள் அனைவரும் மெர்சல் எமோஜியைப் பிரபலப்படுத்த மெர்சல் குறித்த ட்வீட்டைத் தொடர்ந்து வெளியிட்டு...

News image
Updated On :18 ஆகஸ்ட் 2017, 9:23 am

ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் மெர்சல் படத்துக்கென தனி எமோஜி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆங்கிலத்திலும் தமிழிலும் மெர்சல் என்று டைப் செய்தால் விஜய் படம் எமோஜியாக அருகில் தோன்றுகிற வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக முக்கிய நிகழ்வுகளுக்கும் பெரிய திரைப்படங்களுக்கும் மட்டுமே இதுபோன்ற ஒரு அங்கீகாரம் ட்விட்டர் தளத்தில் கிடைக்கும். அது தற்போது மெர்சல் படத்துக்கும் கிடைத்துள்ளது.

தமிழ்ப் படங்களில் இதுபோன்ற எமோஜி முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல் விஜய் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. ட்விட்டரில் உள்ள விஜய் ரசிகர்கள் அனைவரும் மெர்சல் எமோஜியைப் பிரபலப்படுத்த மெர்சல் குறித்த ட்வீட்டைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

Story image

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் மெர்சல் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்றுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் படம், தீபாவளியன்று வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.