மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அப்பாவுடன் சேர்ந்து நடிக்க அத்தனை ஆசை: சொல்வது அக்ஷரா ஹாசன்  

சரியான ஒரு கதை அமைந்தால் அப்பாவுடன் சேர்ந்து நடிக்க அத்தனை ஆசையாக உள்ளேன் ...

News image
Updated On :10 ஏப்ரல் 2017, 6:21 am

சென்னை: சரியான ஒரு கதை அமைந்தால் அப்பாவுடன் சேர்ந்து நடிக்க அத்தனை ஆசையாக உள்ளேன் என்று நடிகர் கமலஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன்   தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், 'அப்பாவுடன் சேர்ந்து நடிக்க அத்தனை ஆசையாக உள்ளேன்.ஆனால் அதற்கு பொருத்தமான ஒரு கதை அமைய வேண்டும், அது எனக்கு மட்டுமின்றி அப்பாவுக்கும் ஒரு ஈடுபாட்டினை உருவாக்குவதாக அமைய வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

தற்பொழுது தனது தந்தை கமல் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் உதவி இயக்குநராக அவர் பணி புரிந்து வருகிறார். முன்னதாக ஹிந்தியில் அமிதாப் பச்சன், தனுஷுடன் சேர்ந்து 'ஷமிதாப்' படத்தில் நடித்துள்ள அவர் தற்போது திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் பெண் வேடத்தில் வேடத்தில் நடித்துள்ள 'லாலி கி ஷாதி மெய்ன் லாடூ தீவானா' என்னும்படம் விரைவில்வெளிவர உள்ளது.

அதேபோல் தமிழில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள 'விவேகம்' படமும் விரைவில் வெளிவர உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.