கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

கமல் கோபக்காரர் என்பதால் ஜாக்கிரதையாக இருப்பேன்: ரஜினி பேச்சு

கமல்ஹாசனைப் போன்ற ஒரு கோபக்காரரை நான் பார்த்தது இல்லை...

News image
Updated On :5 ஏப்ரல் 2017, 9:16 am

நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் (82) லண்டனில் மாரடைப்பால் காலமானார். லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு நள்ளிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிர் பிரிந்தது. 1936-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த சந்திரஹாசன் வழக்குரைஞர் பட்டம் பெற்றவர். கமல்ஹாசனின் இரண்டாவது மூத்த சகோதரர் இவர். நடிகை சுகாசினியின் தந்தை சாருஹாசன் அனைவருக்கும் மூத்தவர். கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து நிர்வகித்து வந்தார் சந்திரஹாசன். அவரது மனைவி கீதாமணி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் காலமானார்.

சந்திரஹாசனின் நினைவஞ்சலிக் கூட்டம் இன்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் ரஜினி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கமல்ஹாசனைப் போன்ற ஒரு கோபக்காரரை நான் பார்த்தது இல்லை. கமல்ஹாசன் கோபக்காரர் என்பதால்தான் நான் அவரிடம் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பேன். அவரை சந்திரஹாசன் தான் வழிநடத்துவார். பாலசந்தர், அனந்து, சந்திரஹாசன், சாருஹாசன் ஆகியோர் கமலின் உயிர்கள். அதில் மூன்று பேர் உயிருடன் இல்லை. அவர்களின் ஆன்மா கமலை வழிநடத்தும். இப்போதுள்ள நடிகர்கள் சம்பாதித்து வைத்திருக்கும் பணம், சொத்து கூட கமலிடம் இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.