ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

”சில சமயங்களில்” படத்தில் நடிக்க பிரகாஷ் ராஜ் பணமே பெற்றுக் கொள்ளவில்லை: இயக்குநர் பிரியதர்ஷன்!

இந்தப் படம் அடைய வேண்டிய இலக்கு பெரியது என்பதால் தான் இதை நகைச்சுவையும், சுவாரஸ்யமும் கலந்து வெகு ஜன ரசனையில் படமாக்கி இருப்பதாக இயக்குநர் பிரியதர்ஷன் தெரிவித்திருக்கிறார்.

News image
Updated On :25 அக்டோபர் 2016, 9:59 am

இயக்குனர் பிரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’திரைப்படம் 74 வது ஆண்டு கோல்டன் குளோப் விருதின் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறது என்பது பழைய செய்தி. திங்களன்று மும்பையில் நடைபெற்ற JIO MAMI 18 வது மும்பைத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பிரியதர்ஷன் தெரிவித்த புது செய்தி என்ன தெரியுமா? பிரகாஷ் ராஜ் இந்தப் படத்தில் நடிப்பதற்கு பணமே பெற்றுக் கொள்ளவில்லை என்பது தான். திரைப்படக் கலையின் மீது தீராக்காதல் கொண்ட ஒரு மகத்தான இயக்குநரும், மகா நடிகரும் இணைந்தால் இப்படிப்பட்ட ஆச்சர்யங்கள் நிகழ்வது சாத்தியமே! 

Story image

எய்ட்ஸ்  இருக்கிறதா? இல்லையா எனப் பரிசோதனை செய்து கொள்ள வரும் எட்டு கதாபாத்திரங்களிடையே மருத்துவமனையின் பேத்தாலஜி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிகழும் சம்பவங்களின் தொகுப்பே “சில சமயங்களில்” திரைப்படத்தின் கதை. எய்ட்ஸ் விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட  இம்மாதிரியான ஒரு கதையை வைத்து எளிதாக ஒரு டாக்குமெண்டரி படமெடுத்திருக்கலாம். ஆனால் அதற்கான பார்வையாளர்கள் மிகவும் குறைவு. இந்தப் படம் அடைய வேண்டிய இலக்கு பெரியது என்பதால் தான் இதை நகைச்சுவையும், சுவாரஸ்யமும் கலந்து வெகு ஜன ரசனையில் படமாக்கி இருப்பதாக இயக்குநர் பிரியதர்ஷன் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.