தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்குத் தோட்டத் தொழில் வேலை செய்வதற்காகச் செல்லும் கபாலி, அங்கு தமிழர்களுக்குக் குறைவான கூலி கொடுக்கப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார். அவர் குரல் வெற்றிபெறவே, மலேசியத் தமிழர்களின் தலைவர் தமிழ்நேசன், கபாலியைத் தன் குழுவில் சேரச் சொல்கிறார். தவறான தொழில்களுக்கு இடம் தர மறுப்பதால், பங்காளி வீரசேகரே தமிழ்நேசனைக் கொன்றுவிடுகிறார். அம்பாகச் செயல்பட்ட வீரசேகரனை விட்டுவிட்டு வில்லாகச் செயல்பட்ட மலேசியக் குழுத் தலைவனை ரஜினி கொல்கிறார். இதனால், ரஜினியை மலேசியத் தமிழர்கள் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்கின்றனர். இதனால், தமிழ்நேசனுக்கு அடுத்து தலைவராக வரவேண்டிய தமிழ்மாறன் பொறாமை கொண்டு, ரஜினியின் குடும்பத்தை அழிக்கத் திட்டம்போட்டு, அந்தத் திட்டத்தில் தோல்வியடைந்து, கபாலியால் வெட்டிக் கொல்லப்படுகிறார். கொலைக் குற்றத்துக்காக 25 ஆண்டுகால சிறைக்குச் செல்கிறார் கபாலி. விடுதலையடைந்து திரும்பிவந்து பார்த்தால், தமிழர்கள் மத்தியில் போதைப்பொருள் கலாசாரம் திணிக்கப்பட்டுள்ளது. இதனால், இதற்குக் காரணமான டோனி மற்றும் வீரசேகரன் கும்பலை ஒழிக்கத் தொடங்குகிறார். இந்நேரத்தில் தனது மனைவியும் மகளும் உயிருடன் இருப்பதை அறிந்து அவர்களுடன் சேர்கிறார். கடைசியில், வில்லன்களைச் சுட்டுக் கொல்கிறார்.