தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ரஜினி - ரஞ்சித் படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், ‘மெட்ராஸ்’ கலையரசனுக்கு வாய்ப்பு?

தன்னுடைய இரண்டு படங்களிலும் முத்திரை பதித்த நடிகர்களுக்கு ரஜினி படத்திலும் ஒரு வாய்ப்பு வழங்கவேண்டும் என்கிற ரஞ்சித்தின் ஆசை...

News image
Updated On :17 ஜூன் 2015, 10:42 am

மெட்ராஸ் படத்தில் தன்னுடைய அசத்தலான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர் கலையரசன்.

ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் கலையரசன் நடிக்க உள்ளார். மெட்ராஸ் போல இந்தப் படத்திலும் கலையரசனுக்கு நல்ல வேடம் கிடைத்துள்ளது. மெட்ராஸ் படத்தைப் பார்த்த ரஜினி, தனது படத்திலும் கலையரசன் நடிக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். ரஞ்சித்துக்கும், கலையரசன் தனது அடுத்தப் படத்தில் நடிக்கவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. கூடவே ரஜினியும் விருப்பப்பட்டதால் கலையரசனுக்குச் சுலபமாக இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

அட்டகத்தி தினேஷும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தன்னுடைய இரண்டு படங்களிலும் முத்திரை பதித்த நடிகர்களுக்கு ரஜினி படத்திலும் ஒரு வாய்ப்பு வழங்கவேண்டும் என்கிற ரஞ்சித்தின் ஆசை நிறைவேறியுள்ளதாகவே தெரிகிறது.

ரஜினி - ரஞ்சித் இணையும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.