தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

4 ஆண்டுகளாக வீட்டு வாடகை கொடுக்காத நடிகருக்கு நீதிமன்றம் உத்தரவு!

5 படுக்கை அறைகள் கொண்ட எனது வீட்டை வாடகைக்குக் கொடுத்தேன். மாத வாடகையாக ரூ. 40,000 நிர்ணயிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூன் 2015, 12:06 pm

கடந்த 4 ஆண்டுகளாக வீட்டு வாடகை கொடுக்காத கன்னட நடிகருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கன்னட நடிகரான யாஷ், தனக்கு நான்கு ஆண்டுகளாக வீட்டு வாடகை தரவில்லை என்று பெங்களூரு - கிரிநகர் காவல் நிலையத்தில் முனிபிரசாத் என்கிறவர் புகார் அளித்தார்.  அதில் அவர் கூறியதாவது:

நடிகர் யாஷுக்கு 5 படுக்கை அறைகள் கொண்ட எனது வீட்டை வாடகைக்குக் கொடுத்தேன். மாத வாடகையாக ரூ. 40,000 நிர்ணயிக்கப்பட்டது. அக்டோபர் 2010 முதல் யாஷ் மற்றும் அவரது அம்மா புஷ்பாவும் அந்த வீட்டில் வசிக்கிறார்கள். சில மாதங்களுக்குப் பிறகு எனக்கு வாடகை வரவில்லை. வாடகையைக் கேட்டால் மிக மோசமாக நடத்துவார்கள். வீட்டில் நிறைய மாற்றங்களையும் செய்துவிட்டார்கள். இதனால் நடிகர் யாஷ் எனக்கு ரூ. 21.37 லட்சம் வழங்கவேண்டும் என்றார்.

இந்தப் புகார் தொடர்பான விசாரணை கீழமை நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளாக வாடகை கொடுக்காத கன்னட நடிகர் யாஷுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சனிக்கிழமைக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக யாஷின் அம்மா புஷ்பா பேட்டியளித்தபோது, முனிபிரசாத் எங்களிடம் வாடகை கேட்கவேயில்லை. வீட்டைக் காலி செய்ய வற்புறுத்துகிறார். நீதிமன்றம் வழியாக நாங்கள் வாடகையைக் கொடுத்துவிடுகிறோம். ஆனால் அவருடைய அனுமதியுடன் பல லட்சம் செலவில் வீட்டில் நிறைய மாற்றங்களைச் செய்துள்ளோம். அதற்கான தொகையை முனிபிரசாத் எங்களுக்கு வழங்கவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.