/

காக்கா முட்டை கதை உருவானது எப்படி?

சில வருடங்களுக்கு முன்னால் என்னால் பிட்சா வாங்க ஆயிரம் ரூபாய் கூட செலவு செய்யமுடியாத நிலை.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:39 am

எழில்

பல சர்வதேச விருதுகளை வாங்கியுள்ள காக்கா முட்டை படம், வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகிறது. தமிழ் சினிமாவில் யதார்த்தமான படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். இதனால் இந்தப் படத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

காக்கா முட்டை டிரெயிலர் பார்க்கும்போது கதை என்ன என்று புரிந்துவிடுகிறது. பிட்சா சாப்பிட ஆசைப்படும் ஏழைச் சிறுவர்களின் கதை தான் காக்கா முட்டை. இந்தப் படத்தின் கதையை எப்படி உருவாக்கினார் இயக்குநர் மணிகண்டன்?

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

சில வருடங்களுக்கு முன்னால் என்னால் பிட்சா வாங்க ஆயிரம் ரூபாய் கூட செலவு செய்யமுடியாத நிலை. ஆனாலும் என் மகனுக்கு எப்படியாவது வாங்கிக் கொடுத்துவிடுவேன். அப்போதுதான் யோசித்தேன். ஏன் குழந்தைகள் பழம் சாப்பிட ஆசைப்படாமால் பிட்சா தான் வேண்டுமென்று அடம்பிடிக்கிறார்கள். விலை மிக அதிகமாக உள்ள பிட்சாவை அடித்தட்டு மக்களின் குழந்தைகள் சாப்பிட்ட நினைத்தால் என்ன ஆகும்? பிட்சா ஆசையைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்ததுதான் காக்கா முட்டையாக உருவாகியுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.