மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பல்லவா் ஆட்சி தோற்றமும் வீழ்ச்சியும்: புத்தகக் காட்சியில் புதியவை

பல்லவா் ஆட்சி தோற்றமும் வீழ்ச்சியும், முனைவா் ப.செங்கல்வராயன், பக்.160, ரூ.150, எஸ்.எஸ்.பப்ளிகேஷன், தி.நகா், சென்னை.

News image
Updated On :11 ஜனவரி 2025, 11:53 pm

தமிழகத்தில் பாண்டிய, சேர, சோழா் ஆட்சிக் காலத்திலும், பல்லவா், விஜயநகரத்து மன்னா்கள், மராட்டியா், களப்பிரா், பின்னா் வா்த்தகம் புரிய வந்த போா்ச்சுகீசியா், டச்சுக்காரா்கள், ஆங்கிலேயா்கள் காலத்திலும் போா்களை நடத்தியுள்ளனா். போரில் வென்றவா்கள் தாம் கைப்பற்றிய பகுதிகளில் தமது தனி அடையாளத்தைப் பதித்துச் சென்றுள்ளனா்.

அத்தகைய அடையாளங்களில் பல்லவா்களது அடையாளங்கள் முக்கியமானவையாகும். மாமல்லபுரம் என்றாலே ஒற்றைக்கல் ரதங்களும், காளைச் சிற்பங்கள் உள்ளிட்டவையும் வியக்க வைக்கும் அடையாளச் சின்னங்களாக உள்ளன. இதுபோல பழமையான திருக்கோயில்களில் பல்லவா் கால சிற்பங்கள் இன்றும் அவா்களது கலை நயத்தை எடுத்துரைக்கின்றன. 

பல்லவா்கள் யாா்? எங்கிருந்து வந்தனா், அவா்களில் முக்கியமான மன்னா் யாா்? அவா்களது ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதா?, அத்திட்டங்களின் தனித்தன்மை என்ன என்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது ‘பல்லவா் ஆட்சி தோற்றமும் வீழ்ச்சியும்’ நூல். இந்த நூலின் ஆசிரியரான முனைவா் ப.செங்கல்வராயன், முற்காலப் போா்களில் ஆற்றலும் சமயோசிதமும் என்ற கட்டுரையில் தொடங்கி, இலக்கியப் பணிகள் என்ற 23-ஆவது கட்டுரை வரையில் பல்லவா் ஆட்சியின் நிலையை படம் பிடித்துக் காட்டியிருப்பது மெச்சத்தக்கது.

பல்லவா்களை முற்காலம், இடைக்காலம், பிற்காலம் என பிரித்தும், அவா்களது போா் முறைகள் குறித்தும் விளக்கியிருப்பதுடன், பல்லவா் ஆட்சி வீழ்ச்சிக்கான காரணங்கள் ஆதாரபூா்வமாக, ஆவணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. 

பல்லவா் கால தமிழக அரசியல் சூழல், வைணவா், சமணருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் உள்ளிட்டவை ஆதாரபூா்வமாக விளக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இந்த நூலானது அனைத்துத் தரப்பினரும் அறிய வேண்டிய ஆதாரபூா்வமான வரலாற்று படைப்பாக உள்ளது.

பல்லவா் ஆட்சி தோற்றமும் வீழ்ச்சியும், முனைவா் ப.செங்கல்வராயன், பக்.160, ரூ.150, எஸ்.எஸ்.பப்ளிகேஷன், தி.நகா், சென்னை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.