அப்போது. அப்படித்தான் புதுமைப்பித்தன், கு.அழகிரி சாமி, வைக்கம் பஷீர், லா ச ரா, எம் டி வி, தகழி, ஜெயந்தன், நாஞ்சில் நாடன், பொன்னீலன், கந்தர்வன், வண்ணதாசன், வண்ணநிலவன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், போன்ற பல எழுத்தாளர்கள் புத்தக வாசிப்பு வாயிலாக எனக்கு அறிமுகமானார்கள். அந்தக் காலகட்டத்தில் புதுமைப்பித்தனின் பல சிறுகதைகள் வாசித்திருக்கிறேன். அன்றும், இன்றும், என்றும் என்னை ஈர்ப்பவை காஞ்சனை, ஒருநாள் கழிந்தது, பால்வண்ணம் பிள்ளை, செல்லம்மாள், பொன்னகரம் உள்ளிட்டவை. இலக்கியச் சுவை பற்றியெல்லாம் பெரிதாக அறிந்து கொள்ளும் முன் கல்லூரி விடுமுறை நாட்களில் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களாக இருந்த பெருமை தேவன், அகிலன், நா.பார்த்தசாரதி, கல்கி, சாவி, தி.ஜா, எஸ்.வி.வி, பிரபஞ்சன் உள்ளிட்டோருக்கு உண்டு. அவர்களைத் தாண்டி சில ஆண்டுகள் கடந்துதான் புதுமைப் பித்தனும், லா.ச.ராவும் அறிமுகமானார்கள்.