பகல்தூக்கம், புண்ணில் அரிப்பையும், உடல் கனம், வீக்கம், வலி, புண்ணிலிருந்து நீர்க்கசிவு, சிவந்த நிறம் ஆகியவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.
புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியைக் கஞ்சியாகவும், உளுந்து, எள்ளு, பட்டாணி, கொள்ளு, அவரை, கீரை வகை சூப்புகள், புளிப்பு, உப்பு, காரச் சுவை, வெல்லம், மாவுப் பண்டங்கள், உலர்ந்த மாமிச சூப்பு, உலர்ந்த கறிகாய்கள், ஆட்டு மாமிசம், நீர்வாழ் பிராணிகளின் மாமிசம், குளிர்ந்த நீர், பச்சைப்பயறுடன் வேக வைக்கப்பட்ட அரிசிக் கஞ்சி, பாயசம், தயிர், பால், மோர் போன்றவற்றை கூழாகவோ, நீர்வடிவத்திலோ அவருக்கு மூக்குக் குழாய் மூலம் கொடுக்கப்படக் கூடாது. இவை அனைத்தும் புண்ணை ஆறவிடாமல், நொச நொசத்த நிலையிலேயே வைத்திருக்கும்.