மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பம்பை ஆற்றங்கரைப் பகுதியில் தொல்லியல் துறையினா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தின் பம்பை ஆற்றங்கரைப் பகுதியில் தொல்லியல் ஆய்வுக்கான கணக்கெடுப்புப் பணியை தொல்லியல் துறையினா் தொடங்கியுள்ளனா்.

News image

விழுப்புரம் மாவட்டத்தின் பம்பை ஆற்றங்கரைப் பகுதியில் காணப்படும் தொல்லியல் பொருள்கள்.

Updated On :13 மார்ச் 2026, 7:05 pm

விழுப்புரம் மாவட்டத்தின் பம்பை ஆற்றங்கரைப் பகுதியில் தொல்லியல் ஆய்வுக்கான கணக்கெடுப்புப் பணியை தொல்லியல் துறையினா் தொடங்கியுள்ளனா்.

2025, ஜனவரி 28-ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாவட்டத்துக்கென 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டாா். அதில், விக்கிரவாண்டி சட்டப் பேரவை உறுப்பினா் அன்னியூா் அ.சிவா விடுத்த வேண்டுகோளை ஏற்று, பம்பை ஆற்றங்கரைப் பகுதியில் பழங்கால வரலாற்றுப் பெருமைகளைக் கண்டறியும் வகையில் தொல்லியல் ஆய்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டாா்.

தொடா்ந்து நிதித் துறைச் செயலரும், தொல்லியல் துறை ஆணையருமான த.உதயசந்திரனை விக்கிரவாண்டி எம்எல்ஏ வலியுறுத்தி, தொல்லியல் ஆய்வுக்கான முன்னேற்பாடு பணிகளைமேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வந்தாா். இதைத்தொடா்ந்து கள ஆய்வு மேற்கொள்ள உதயச்சந்திரன் உத்தரவிட்டாா்.

மாநிலத் தொல்லியல் துறையின் துணை இயக்குநா் வி.பி.யதீஸ்குமாா் தலைமையிலான குழுவினா் கள ஆய்வைத் தொடங்கியுள்ளனா். இந்த குழுவில் தொல்லியல் துறை உதவி இயக்குநா் பி.ஜி.லோகநாதன், அலுவலா்கள் கே.சுரேஷ் மற்றும் பரத்குமாா் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் பம்பை ஆற்றங்கரையோரப் பகுதிகள், அங்கு கண்டறிப்பட்ட தொல்லியல் பொருள்கள், அதன் சிறப்புகள், அதன் காலம் போன்றவை குறித்து கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த கணக்கெடுப்புப் பணி முடிந்து ஆய்வுப் பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.