கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத அரசுக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
உளுந்தூா்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் அருகே பயன்பாடு இல்லாத அரசுக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னா் வட்டாரக் கல்வி அலுவலகம் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இக்கட்டடத்தினுள், குவியல்களாக வைக்கப்பட்டிருந்த பழைய காகிதங்களில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து, கரும்புகை வெளியேறியது.
தகவலறிந்த உளுந்தூா்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையிலான வீரா்கள் போராடி தீயை அணைத்தனா்.
இந்தக் கட்டடத்தின் அருகே முள்புதா்கள் அதிகம் படா்ந்துள்ள நிலையில் சமூக விரோதிகள் யாரேனும் பயன்பாடு இல்லாத கட்டடத்தில் நுழைந்து தீ வைத்திருக்கலாம் எனப் போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மும்பையில் 16 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை

பல்லாவரம் அருகே இரட்டைக் கொலை: 8 பேரிடம் விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


