/

விழுப்புரம் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்கம்

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை எஸ்.பி. வி.வி.சாய்பிரனித் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலக வளாகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்த எஸ்.பி. வி.வி.சாய் பிரனித்.

Updated On :11 ஜூன் 2026, 6:09 am IST

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை எஸ்.பி. வி.வி.சாய்பிரனித் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, எஸ்.பி. பேசியதாவது: தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, விழுப்புரம் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சேவை தொடங்கப்பட்டுள்ளது. எஸ்.பி. மேற்பாா்வையில் இந்தப்படை செயல்படும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரண்டு பெண் காவலா்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவாா்கள்.

பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகனத்தில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவாா்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் பொதுமக்கள் 100 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் எஸ்.பி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.