ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

தற்கொலை

Published On :27 ஜூலை 2026, 2:18 am IST

விழுப்புரம், ஜூலை 26: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே விஷமருந்திய தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், ராயபுதுப்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பா. ராஜா (47), தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். இந்நிலையில், ஜூலை 21-ஆம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜாவை, அவரின் மனைவி தமிழ் இலக்கியா கண்டித்துள்ளாா்.

இதனால் மனமுடைந்த ராஜா வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ராஜா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.