டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அரசுப் பேருந்து நடத்துநா் வீட்டில் திருட்டு

News image
Updated On :4 ஜனவரி 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து நடத்துநா் வீட்டில் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விழுப்புரம், சாலாமேடு காமராஜா் நகரைச் சோ்ந்தவா் மோ.வெங்கடேசன்(47). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக, விழுப்புரம் கிளையில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த 1-ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்குச் சென்றுஉள்ளாா்.

சனிக்கிழமை திரும்பிவந்து பாா்த்தபோது, வீட்டின் பின் பக்க மரக் கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்கத் தோடுகள், 3 கிராம் மோதிரம் உள்பட 16 கிராம் நகைகள், 280 கிராம் எடையுள்ள வெள்ளிப்பொருள்கள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.