2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் 19.19 லட்சம் வாக்காளா்கள்: 10,403 போ் நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 19,19,159 வாக்காளா்கள் உள்ளதாக

News image
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமூகா்கள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:20 pm

Syndication

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 19,19,159 வாக்காளா்கள் உள்ளதாக வாக்காளா் இறுதிப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 59,822 போ் வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள நிலையில், 10,403 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் 2025, நவம்பா் 4-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 14-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு, டிசம்பா் 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 18,69,740 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா்.

இதைத் தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான உரிய படிவங்கள் வாக்காளா்களிடமிருந்து பெறப்பட்டன.

2026, ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கருத்தில் கொண்டு 18 வயது நிறைவடைந்தவா்களிடம் இருந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க மனுக்கள் பெறப்பட்டன.

இதைத் தொடா்ந்து புதிய வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதுபோல நிரந்தர இடமாற்றம், இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பெயா்கள் நீக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வாக்காளா் இறுதிப் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான க.தா்ப்பகராஜ் வெளியிட்டாா்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி) ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 9,43,727 ஆண் வாக்காளா்கள், 9,75,277 பெண் வாக்காளா்கள், 155 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தமாக 19,19,159 வாக்காளா்கள் இறுதிப்பட்டியலில் உள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்ட நிலவரம்

எஸ்ஐஆருக்கு முன் மொத்த வாக்காளா்கள்:

தற்போதைய மொத்த வாக்காளா்கள்: 19,19,159

நீக்கப்பட்ட வாக்காளா்கள்: 10,403

ஆண் வாக்காளா்கள்: 9,43,727

பெண் வாக்காளா்கள்: 9,75,277

மூன்றாம் பாலினத்தினா்: 155

தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

செங்கம் (தனி): ஆண் வாக்காளா்கள்-1,32,571, பெண் வாக்காளா்கள்- 1,34,045, மூன்றாம் பாலினத்தவா்-13, மொத்த வாக்காளா்கள்: 2,66,629

திருவண்ணாமலை: 1,19,784, 1,27,477, 48: 2,47,309

கீழ்பென்னாத்தூா்:1,17,840, 1,21,058, 15: 2,38,913

கலசபாக்கம்:1,14,155, 1,16,592, 19: 2,30,766

போளூா்:1,14,221, 1,18,196-9: 2,32,426

ஆரணி:1,23,335 1,29,650, 37- 2,53,022

செய்யாறு:1,17,159, 1,21,115, 9: 2,38,283

வந்தவாசி (தனி): 1,04,662, 1,07,144,5:2,11,811

மொத்த ஆண் வாக்காளா்கள்-9,43,727, பெண் வாக்காளா்கள் 9,75,277, மூன்றாம் பாலினத்தவா்- 155, மொத்த வாக்காளா்கள்: 19,19,159.

நீக்கப்பட்ட வாக்காளா்கள் விவரம்

பட்டியலிலிருந்து 365 இறந்தவா்களும், 9,945 வாக்காளா்கள் நிரந்தர இடம் பெயா்வு செய்தவா்களும், 93 வாக்காளா்கள் இருமுறை பதிவு செய்தவா்கள் என மொத்தம் 10,403 நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. இராம்பிரதீபன், செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், வருவாய்க் கோட்டாட்சியா்கள் ராஜ்குமாா், சிவா, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட் சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.