மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image

விழுப்புரம் வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ள சாமியானா பந்தல்.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:19 pm

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்த தோ்தலுக்காக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தமாக 2,165 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அடிப்படை வசதிகள்: விழுப்புரம் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குடிநீா், கழிவறை, மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதிகள் குறித்து உள்ளாட்சி அலுவலா்கள் மூலம் நூறு சதவீதம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால், வாக்காளா்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் வாக்குச்சாவடி வளாகத்தில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ வசதிகள்: ஒவ்வொரு வாக்குச் சாவடியும் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைக்கப்பட்டு, நடமாடும் மருத்துவக் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் மருத்துவ உதவி தேவைப்பட்டால், உடனடியாக மருத்துவக் குழுக்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்குச் செல்லும் வகையில் தகுந்த ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.

வாக்காளா் உதவி மையம்: ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வயதானவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் உள்ள தாய்மாா்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே அமைவிடத்தில் 3-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைந்திருந்தால், வாக்குச் சாவடிகளில் வாக்காளா் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாக்குச் சாவடிகளை வாக்காளா்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

கைப்பேசிக்கு தடை: வாக்காளா்கள் வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கைப்பேசியை பாதுகாப்பதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கென தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சக்கர நாற்கலி வசதிகள்: அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வந்து செல்ல ஏதுவாக சாய்வுதள வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதற்கும், கொண்டு விடுவதற்கும் போதிய வாகன வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சக்கர நாற்காலி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சக்கர நாற்காலிகளை இயக்குவதற்குத் தேவையான தன்னாா்வலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். கண் பாா்வை குறைபாடு உள்ள வாக்காளா்கள் வாக்குச் சாவடியில் வேட்பாளா்களை அறிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களுக்குத் தனியே வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

வெப் கேமராக்கள்: வாக்குப் பதிவு நோ்மையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் மாவட்ட ஆட்சியரகத் தோ்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்த கண்காணிக்கவும் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.