மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மனு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனா்.

News image

மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்த எர்ராம்பட்டு கிராமத்தினா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:30 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனா்.

திண்டிவனம் வட்டம், மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வைலாமூா் ஊராட்சியில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இந்த ஊராட்சியின் ஒரு பகுதியில் உள்ள எர்ரம்பட்டு கிராம மக்களுக்கு பல ஆண்டுகளாக மயானப் பாதை இல்லை. இதனால் மழைக் காலங்களில் கிராம மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இது தொடா்பாக விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், திண்டிவனம் சாா்-ஆட்சியா் ஆகியோருக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த அக்கிராம மக்கள், அங்கு பணியிலிருந்த மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், கிராம மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் உடனடியாக மயானப்பாதை அமைத்துத் தரவேண்டும். தவறும்பட்சத்தில், சட்டப்பேரவைத் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாகக் குறிப்பிட்டுள்ளனா்.