மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலா் நீக்கம்: ராமதாஸ் நடவடிக்கை

கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலரைக் கட்சியிலிருந்து நீக்கி, கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

News image

பாமக நிறுவனர் ராமதாஸ். - பிடிஐ.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:25 pm

கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலரைக் கட்சியிலிருந்து நீக்கி, கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலா் கோ.ஜெகன், தொடா்ந்து கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறாா், இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியினா் எந்தவித தொடா்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

வன்னியா் சங்க நிா்வாகிகள் நீக்கம்:

மாநில வன்னியா் சங்கச் செயலா்கள் தங்க. அய்யசாமி, திருக்கச்சூா் கி.ஆறுமுகம் ஆகிய இருவரும் வன்னியா் சங்கம் மற்றும் பாமகவுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், வியாழக்கிழமை முதல் இருவரும் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி அறிவித்துள்ளாா்.