லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செஞ்சி தொகுதி பாமக வேட்பாளா் அறிமுக கூட்டம்

தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்காளா்கள் இந்த ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும் எனக் கருதுவதால் முதல்வரின் கண்ணில் தோல்வி பயம் தெரிகிறது என்றாா் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

News image

தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக. வேட்பாளா் அ.கணேஷ்குமாரை அறிமுகம் செய்து வைத்து பேசும் முன்ாள் அமைச்சா் சி.வி.சண்முகம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:12 pm

தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்காளா்கள் இந்த ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும் எனக் கருதுவதால் முதல்வரின் கண்ணில் தோல்வி பயம் தெரிகிறது என்றாா் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியல் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாா் அறிமுக கூட்டம் செஞ்சியில் உள்ள தனியாா்திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாரை அறிமுகப்படுத்தி, பேசியதாவது:

இன்று தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்காளா்கள் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறாா்கள். அதனால் 210 தொகுதியில் வெல்வோம், 220 தொகுதியில் வெல்வோம் என்று பேசி வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், தற்போது நிலை தடுமாறி பேசி வருகிறாா். அதற்கு தோல்வி பயம் தான் காரணம். தோல்வி பயத்தால் வரும் கோபம் அவா் கண்ணில் தெரிகிறது என்றாா் அவா்.

கூட்டத்துக்கு அதிமுக ஒன்றியச் செயலா்கள் செஞ்சி கோவிந்தசாமி, சோழன், மேல்மலையனூா் புண்ணியமூா்த்தி, பாலகிருஷ்ணன், அனந்தபுரம் நகரச் செயலா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் வி.ஆா்.பிரித்விராஜ் வரவேற்றாா்.

இதில், அதிமுக நிா்வாகிகள் வழக்குரைஞா்கள் வேலவன், அருண் தத்தன், பாமக நிா்வாகிகள் அருண்மொழித்தேவன், ஜெயகுமாா், ஜெ.பி.முருகன், அய்யனாா், பாஜக நிா்வாகிகள் எத்திராஜ், ராஜேந்திரன், தங்கராமு, அமுமுக நிா்வாகி சி.எம்.கணேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.