புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே அமையவிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் பூத் அளவிலான தொண்டர்களிடம் உரையாடவிருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டை என்ஜின் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும், புதுச்சேரி மக்கள் மீண்டும் என்டிஏ அரசை ஆசிர்வதிக்கவிருக்கின்றனர்.
வரும் 30 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெறும் என்னுடைய பூத் வலிமையான பூத் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
நமோ செயலி வாயிலாக, என்னுடைய பூத் வலிமையான பூத் - புதுச்சேரி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பூத் அளவிலான தொண்டர்கள் உரையாடுவதுடன், யோசனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
புதுச்சேரியின் 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜூன் 15 ஆம் தேதியுடன் முடிவடைவதால், ஏப்ரல் 9 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
Summary
Puducherry Assembly Election: Bless NDA yet again, says PM Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் பிரதமா் மோடி சாலைப் பேரணி: உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

மாற்றத்திற்கானது தேசிய ஜனநாயகக் கூட்டணி : பிரதமர் மோடி
புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாமில் இன்று வாக்குப் பதிவு

தே.ஜ. கூட்டணியில் ஐஜேகேவுக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

