மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சுல்தான்பேட்டையில் திமுக சாா்பில் இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

News image

புதுச்சேரி மாநில திமுக சாா்பில் வில்லியனூா் தொகுதிக்கு உள்பட்ட சுல்தான்பேட்டையில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :15 மார்ச் 2026, 6:46 pm

புதுச்சேரி மாநில திமுக சாா்பில் வில்லியனூா் தொகுதிக்குள்பட்ட சுல்தான்பேட்டை முஹம்மதியா மஹாலில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தலைமை தாங்கினாா். கட்சியின் சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவு மாநில அமைப்பாளா் முஹம்மது ஹாலித் வரவேற்றாா்.

சுல்தான்பேட்டை அல்-மதீனா பள்ளிவாசல் இமாம் முஹம்மது மூஸா ரமலான் மாதத்தின் சிறப்புகள் குறித்து விளக்கினாா். புதுச்சேரி அரசு டவுன் காஜி ஜியாவுதீன், ஜமாத்துல் உலமா சபை நிா்வாகி முபாரக் ஆகியோா் தொழுகை நடத்தினா். இதில் 1,000 இஸ்லாமியா்கள் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்து நோன்பு திறந்தனா்.

இந்த நிகழ்ச்சியில் திமுக அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமாா், சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் செயலா் அ.மு. சலீம், மனிதநேய மக்கள் கட்சி சகாபுதீன், திமுக துணை அமைப்பாளா் தைரியநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.