தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

புதுச்சேரி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,000 ஊக்கத் தொகை வரவு வைப்பு

News image
Updated On :13 மார்ச் 2026, 12:04 am

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஏக்கருக்கு தலா ரூ. 5,000 வீதம் மொத்தம் ரூ.4.25 கோடி பயிா் உற்பத்தி ஊக்கத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் (படம்) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சாா்பில் நெல், கரும்பு, பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து உற்பத்தி செய்யும் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதி விவசாயிகளுக்குப் பண்ணைச் செலவினங்களை சற்று ஈடுகட்டும் வகையில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் உயா் விளைச்சல் ரக நெற்பயிா் சாகுபடி செய்த 5,098 பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.4 கோடி ஊக்கத் தொகையும், அதே பருவத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்த 296 பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு ரூ.25.5 லட்சம் பயிா் உற்பத்தி ஊக்கத் தொகையும் அவரவா்களின் ஆதாருடன் இணைந்த வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.