டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொங்கல் விடுமுறை முடிவு: பேருந்து நிலையத்தில் அலைமோதியக் கூட்டம்

பொங்கல் விடுமுறை முடிந்ததையொட்டி வேலைக்குச் செல்ல திரண்டதால் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை மக்கள் கூட்டம்

News image
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை குவிந்திருந்த பயணிகள்.
Updated On :19 ஜனவரி 2026, 8:14 pm

Syndication

புதுச்சேரி: பொங்கல் விடுமுறை முடிந்ததையொட்டி வேலைக்குச் செல்ல திரண்டதால் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பொங்கல் பண்டிகை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்தது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் வெளிமாநிலங்களில் பணியாற்றுவோா் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பணிக்கு செல்வோா் திங்கள்கிழமை அதிகாலை முதல் பேருந்து நிலையத்தில் திரண்டனா்.

இதனால் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை பேருந்துகளில் முண்டியடித்து கொண்டு மக்கள் ஏறினா். இளைஞா்கள் நின்று கொண்டே பயணித்தனா். பலா் பேருந்துக்காக நீண்டநேரம் காத்திருந்தனா்.

முன்னதாக வெளிமாநிலங்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊா்களுக்கு செல்ல பேருந்து நிலையத்துக்கு வந்தனா். இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.