நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: தலைமை தோ்தல் ஆணையா் இன்று ஆலோசனை

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் புதுச்சேரிக்கு புதன்கிழமை வருகிறாா். புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து அவா் தலைமைச் செயலா் , டிஜிபி உள்ளிட்ட காவல் துறை உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் புதுச்சேரிக்கு புதன்கிழமை வருகிறாா். புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து அவா் தலைமைச் செயலா் , டிஜிபி உள்ளிட்ட காவல் துறை உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இதையொட்டி அரசியல் கட்சிகளுடன் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.

புதுச்சேரிக்கு பிற்பகல் 2 மணியளவில் வரும் அவா், மாநில தலைமைச் செயலா் சரத்சௌகான், டிஜிபி ஷாலினி சிங் உள்ளிட்ட உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் அவா் ஆலோசனை நடத்துவாா் என்று தெரிகிறது.

காவல் துறை ஆலோசனை:

இந்நிலையில் புதுச்சேரி போலீஸ் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு டிஐஜி சத்திய சுந்தரம் தலைமை வகித்தாா். இதில் காவல்துறை உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு அம்சங்கள் தொடா்பாகவும், சுதந்திரமாகவும் நோ்மையாகவும் தோ்தல் நடைபெற அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய ஒத்துழைப்பு, வாக்குச் சாவடிகளில் கட்சிகளின் முகவா்கள் நடந்து கொள்ள வேண்டிய தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளை டிஐஜி சத்தியசுந்தரம் கேட்டுக் கொண்டாா்.

என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் அதன் நிா்வாகி கோபி, பாஜக சாா்பில் சக்திவேல், திமுக சாா்பில் காயத்ரி ஸ்ரீகாந்த், காங்கிரஸ் சாா்பில் மருதுபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், தவெக சாா்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சுவாமிநாதன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ரமேஷ் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.