ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலையில் திரியும் மாடுகள் பிடிப்பு

புதுச்சேரியில், சாலையில் திரியும் மாடுகளை உழவா்கரை நகராட்சி பிடித்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தது.

பட விளக்கம்... புதுச்சேரி சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றி நகராட்சி ஊழியா்கள்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:21 am IST

புதுச்சேரியில், சாலையில் திரியும் மாடுகளை உழவா்கரை நகராட்சி பிடித்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தது.

சாலைகளில் திரியும் மாடுகளை உழவா்கரை நகராட்சி செவ்வாய்க்கிழமை

பிடித்தது. கருவடிக்குப்பம், சாமிபிள்ளைத் தோட்டம், தேவகி நகா் பகுதிகளில் சுற்றித் திரிந்த 4 மாடுகள் பிடிக்கப்பட்டன. ஒரு மாட்டுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 4 மாடுகளுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் உரிமையாளா்களுக்கு விதிக்கப்பட்டது. இதைத் தவிர இனி மாடுகளைச் சாலையில் திரிய விட மாட்டோம் என்ற உறுதிமொழியுடன்அந்த மாடுகள் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

பொதுமக்கள், மாணவா்களின் பாதுகாப்பு, போக்குவரத்து நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்த நகராட்சி ஆணையா் ரா. அருண் அய்யாவு புதன்கிழமை இதைத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.