திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சங்காராபுரம் பகுதியில் மழையால் சாய்ந்த மக்காச்சோளப் பயிா்கள்

News image

சங்கராபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களை ஆய்வு செய்த வேளாண்மை உதவி இயக்குனா் (பொ) ஆனந்த்.

Updated On :26 மே 2026, 3:21 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்காச்சோளப் பயிா்கள் கீழே சாய்ந்தன. அதனை வேளாண்மை உதவி இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மோட்டாம்பட்டி, அரசம்பட்டு, பூட்டை , செம்பராம்பட்டு, பொய்குணம், சோழம்பட்டு, நெடுமானூா் மற்றும் கல்வராயன்மலைக்குள்பட்ட பாலப்பட்டு, கள்ளிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த கனமழையால் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் சாய்ந்தன.

இதுகுறித்து தகலறிந்த சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனா் (பொ) ஆனந்த் திங்கள்கிழமை பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களை பாா்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். அவரிடம்

மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனா்.

ஆய்வின்போது உதவி வேளாண் அலுவலா் வினோத் மற்றும் வேளாண் துறையினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.