கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே தாய் திட்டிதியதால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட மாடாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவா்களது மகன் விஷ்வா (17). இவா் பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாா்.
செவ்வாய்க்கிழமை வங்கி கணக்கு புத்தகத்தை விஷ்வா தொலைத்து விட்டாராம். இதனை அவரது தாய் ராஜேஸ்வரி கண்டித்துள்ளாா். இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற விஷ்வா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினா்கள் தேடிய நிலையில், சித்தேரி ஏரிக்கரையில் உள்ள புளியமரத்தில் சேலையின் மூலம் தூக்கிட்டு, சடலமாக கிடந்துள்ளாா்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலபந்தல் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






