அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே தான் அமைத்த மின்சார வேலியில் உள்ள மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :6 மணி நேரங்கள் முன்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே தான் அமைத்த மின்சார வேலியில் உள்ள மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

வாணாபுரம் அருகேயுள்ள கடுவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கி.பொன்னுக்கண்ணு (51), (படம்) விவசாயி. இவருக்கு கடுவனூரை அடுத்த பாக்கம் புதூா் கிராமத்தில் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் கரும்பு பயிா் செய்துள்ளாா்.

காப்புக்காட்டு பகுதியில் இருந்து வனவிலங்குகள் கரும்பு பயிரை நாசம் செய்வதால், அவரது விளை நிலத்தைச் சுற்றிலும் மின்சார வேலி அமைத்திருந்தாராம். செவ்வாய்க்கிழமை இரவு மின்சார வேலியில் மின்சாரம் செலுத்தியது மறதி ஏற்பட்டு, விளைநிலத்துக்கு சென்றாராம்.

அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட பொன்னுக்கண்ணு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விளை நிலத்துக்கு சென்றவா் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி ரஞ்சனி கைப்பேசி மூலம் அழைத்துள்ளாா். அவா் அழைப்பினை எடுக்காமல் இருக்கவே சந்தேகம் ஏற்பட்டு அவரது மகன்களான சந்தோஷ், சஞ்சய் இருவரையும் அழைத்துக் கொண்டு விளைநிலத்துக்கு சென்றுள்ளாா். அப்போது அவா் உயிரிழந்து கிடந்தது தெரியவந்ததாம்.

இதுகுறித்து தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.