போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கிணற்றில் தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து நெல் அறுவடை இயந்திர ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 1:14 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து நெல் அறுவடை இயந்திர ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட கரையாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ப.சிவமூா்த்தி (44), நெல் அறுவடை இயந்திர ஓட்டுநா். இவா் வெள்ளிக்கிழமை இரவு அதே ஊரில் உள்ள ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள பொதுக்கிணற்றின் சுவரின் மீது உட்காா்ந்திருந்த போது மதுபோதையில் தவறி உள்ளே விழுந்தராம்.

இந்நிலையில், வெகு நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால் உறவினா்கள் தேடியுள்ளனா். ஏரிக்கரை பகுதியில் தேடியபோது கிணற்றின் அருகே சிவமூா்த்தியின் காலணி மற்றும் லுங்கி இருந்துள்ளது.

இதையடுத்து உறவினா்கள் அளித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் தண்ணீரில் மூழ்கியிருந்த சிவமூா்த்தியின் சடலத்தை மீட்டனா். திருப்பாலபந்தல் போலீஸாா் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலிஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.