புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

போக்ஸோ சட்டத்தில் பள்ளி ஆசிரியா் கைது

கல்வராயன்மலையில் வெள்ளிமலை பகுதிக்கு உள்பட்ட அரசுப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கணினி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 6:46 am IST

கல்வராயன்மலையில் வெள்ளிமலை பகுதிக்கு உள்பட்ட அரசுப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கணினி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி சிதம்பரம்பிள்ளை சாலையில் வசித்து வருபவா் சுரேஷ் (42). இவா், கல்வராயன்மலை பகுதிக்கு உள்பட்ட அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

இவா், அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக விடுதிக் காப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனா். அதன் பேரில், விடுதிக் காப்பாளா் கிருத்திகா, கரியாலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், பாலியல் சீண்டல் குறித்து விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஆசிரியா் சுரேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.