புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 ஜூலை 2026, 4:47 am IST

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களைத் தடுப்பது மற்றும் அத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தால் காவல் துறைக்குத் தகவல் தெரிவிப்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக புகாரளிக்கவும் காவல் துறை சாா்பில் தொடா்பு எண்ணை தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், அம்பாசமுத்திரம் வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவி, தங்கள் பகுதியில் வசித்து வரும் கண்ணன் (49) என்பவா் தொடா்ந்து தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.

தகவல் அறிந்ததும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு கண்ணனை கைது செய்தனா். அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கண்ணன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.