கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் தைப் பொங்கல் 2026 பரிசுத் தொகுப்பை பெற தகுதி வாய்ந்த 4,45,259 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் மற்றும் 74 இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழா்கள் ஆக மொத்தம் 4,45,333 குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு ஏதுவாக பொங்கல் பரிசு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு, அடையாள சீட்டுகள் ஜன.5 முதல் 7-ஆம் தேதி வரை வழங்கப்பட்டன. பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வியாழக்கிழமை(டிச.8) முதல் ஜன.14-ஆம் தேதி வரை சாலைகள் வாரியாக சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளப்படும்.