வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

உள்ளாட்சி அமைப்புகளில் பதவி: மாற்றுத்திறனாளிகள் வரவேற்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினா் பதவிகளை வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:08 pm

மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினா் பதவிகளை வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி தியாகதுருகத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஒருங்கிணைப்பாளரும், தியாகதுருகம் பேரூராட்சி மன்ற நியமன உறுப்பினருமான கருணாகரன் தலைமை வகித்தாா்.

மாற்றுத் திறனாளிகள் பிரிவு மாநில செயலா் தீபக் நாதன் கலந்துகொண்டு, தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினாா். (படம்)

கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்பில் நியமன உறுப்பினா் பதவிகளை வழங்கி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்வில், தியாகதுருகம் பேரூராட்சி மன்றத் தலைவா் வீராசாமி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் ஞானசேகரன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.