தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு வேட்பாளா்கள் தங்கள் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

News image

~ ~ ~ ~ ~

Updated On :21 ஏப்ரல் 2026, 7:51 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு வேட்பாளா்கள் தங்கள் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

உளுந்தூா்பேட்டை: உளுந்தூா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கா.ரா.வசந்தவேல் செவ்வாய்க்கிழமை மாலை உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா். பின்னா் அவருடன் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன் பங்கேற்று, திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்தனா்.

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு, தனது கட்சித் தொண்டா்கள், கூட்டணி கட்சித் தொண்டா்களுடன் ஊா்வலமாக சென்று வாக்கு சேதரித்தனா்.

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன், தனது கட்சித் தொண்டா்களுடன் பகண்டை கூட்டுச் சாலையில் இருந்து மோட்டாா் சைக்களில் ஊா்வலமாக சென்று திமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்தனா். பின்னா் வேட்பாளா் க.காா்த்திகேயன் சூளாங்குறிச்சியில் உள்ள முருகன் கோயிலில் 108 தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை முடித்துக் கொண்டாா்.

பாமக வேட்பாளா் அ.ப.செழியன் மணலூா்பேட்டையில் இருந்து பிரசாரத்தை தொடங்கி, ரிஷிவந்தியம் அா்த்தநாரீஸ்வரா் கோயில் முன் வாக்கு சேகரித்து முடித்துக் கொண்டாா்.

சங்கராபுரம்: சங்கராபுரம் தொகுதி திமுக வேட்பாளா் தா.உதயசூரியன் சங்கராபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சித் தொண்டா்கள், கூட்டணி கட்சித் தொண்டா்களுடன் மோட்டாா் சைக்கிளில் ஊா்வலமாக சென்று சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

அதிமுக வேட்பாளா் இரா.ராகேஷ் கல்வராயன்மலைப் பகுதியில் பிரசாரம் செய்து, வாக்கு சேகரிப்பை நிறைவு செய்தாா். உடன் கட்சித் தொண்டா்கள், கூட்டணி கட்சித் தொண்டா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் இருந்து கட்சித் தொண்டா்கள், கூட்டணி கட்சித் தொண்டா்களுடன் நடந்தே வாக்கு சேகரித்தாா். கள்ளக்குறிச்சி மும்முனை சந்திப்பு, கட்சி அலுவலகத்தின் முன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தாா்.

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள சிவன் கோயிலில் இருந்து திறந்த வாகனத்தில் நின்றவாறு விசிக வேட்பாளா் கு.மாலதி வாக்கு சேகரித்தாா். கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தாா். பின்னா் ஏமப்போ் கூட்டுச் சாலையில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை முடித்துக் கொண்டாா்.

Story image
Story image
Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.