மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் பகுதியில் ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 4:33 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் பகுதியில் ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட வாணாபுரம் ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜை செய்து திறந்த ஜீப்பில் நின்றவாறு திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் தனது பிரசாரத்தை தொடங்கினாா்.

காலை 8 மணிக்கு மணலூா்பேட்டையில் தொடங்கி முருகம்பாடி, அத்தியந்தல், தேவரடியாா்குப்பம், வீரட்டகரம், அரும்பாக்கம், கீழ்த்தாழனூா், எரவலம், பெரியானூா், செட்டிந்தாங்கல், வேங்கூா் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் அவா் ஈடுபட்டாா்.

முருகம்பாடி கிராமத்தில் திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் தனது தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு பறை அடித்துக் கொண்டே நடனம் ஆடி திமுக ஆட்சியின் சாதனைகளை கூறியவாறு வாக்குகளை சேகரித்தாா்.

Story image

உடன் மணலூா்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம், நகரச் செயலா் ஜெய்கணேஷ், திமுக ஒன்றியச் செயலா் பாரதிதாசன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகி சுப்பிரமணியம், தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியின் நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.