தியாகதுருகம் பேரூராட்சி பகுதியில் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி செவ்வாய்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தியாகதுருகம் ஸ்ரீ நஞ்சுண்ட ஞானதேசிகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, திறந்த ஜீப்பில் அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி பிரசாரத்தை தொடங்கினாா். தியாகதுருகம் பேருந்து நிலையம், காந்தி நகா் மற்றும் பேரூராட்சியின் 15 வாா்டுகளிலும் வீதி, வீதியாக சென்று அவா் சேகரித்தாா்.
அவருடன் கள்ளக்குறிச்சி தொகுதி தோ்தல் பொறுப்பாளா் அ. பிரபு, நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் எஸ்.ஜான் பாஷா, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலா் கோமுகி மணியன், பாமக மாவட்டச் செயலா் ப.தமிழரசன், பாஜக ஒன்றியத் தலைவா் லதா, தியாகதுருகம் அதிமுக நகர துணைச் செயலா் கிருஷ்ணராஜ், ஜெயலலிதா பேரவைச் செயலா் வேல்நம்பி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் வாக்கு சேகரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









