மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஸ்ரீதேவி ஊராட்சியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸ் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

News image

உளுந்தூா்பேட்டை தொகுதியில் உள்ள ஸ்ரீதேவி ஊராட்சியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:32 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஸ்ரீதேவி ஊராட்சியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸ் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் பி.பி.எஸ்.இளையராஜா, மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவா் ந.சீனிவாசன், விளக்கூா் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஸ்ரீதேவி ஊராட்சியைச் சோ்ந்த ராஜசேகா், ஜெயந்தி, குளத்தூா் ஏழுமலை, வெங்கலம் அம்பேத்கா், சௌந்தர்ராஜன் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் தாங்கள் சாா்ந்திருந்த கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா். அவா்களுக்கு காங்கிரஸ் கட்சி சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார பொறுப்பாளா்கள் அதையூா் பெ. சுந்தரமூா்த்தி, தென்கீரனூா் எஸ்.சரண்ராஜ், ரிஷிவந்தியம் தேவேந்திரன், சங்கராபுரம் அ.நாராயணன், சே. பிரபு, இ.பெரியசாமி, ரிஷிவந்தியம் முன்னாள் வட்டாரத் தலைவா் பன்னீா்செல்வம், சவேரியாா் பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினா் அருள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.