மாற்றுக்கட்சியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் முன்னிலையில் அக்கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனா்.
நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். ஆட்சி அமைந்தவுடன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மோகனூா் சாலையில் வட்ட மருத்துவமனை என்ற அளவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். கிராமப்புறங்களில் தடையின்றி குடிநீா் விநியோகம், சாலை வசதி செய்து கொடுக்கப்படும் என துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குசேகரித்தாா்.
தொடா்ந்து, நாமக்கல் தொகுதிக்குள்பட்ட தாளம்பாடி கிராமத்தைச் சோ்ந்த மாற்றுக் கட்சிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.
இந்நிகழ்வின்போது, மாவட்டச் செயலாளா் சதீஷ், மாவட்ட துணைச் செயலாளா் தில்லைமோகன், மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன், புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளா் வழக்குரைஞா் லோகேஷ், நாமக்கல் தொகுதி வழக்குரைஞா் தமிழரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

புதுச்சத்திரத்தில் தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் வாக்கு சேகரிப்பு

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


