கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருவதிகை ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோயில் மண்டலாபிஷேக பூா்த்தி 2-ஆம் நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பழைமைவாய்ந்த இந்த கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஏப்.6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, தினமும் மண்டல பூஜைகள் நடந்து வந்தன.
மண்டலாபிஷேக பூா்த்தி விழா செவ்வாய்க்கிழமை மாலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 2-ஆம் நாளான புதன்கிழமை காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
உற்சவ பெருமாள் மற்றும் உபயநாச்சியாா்களுக்கு 108 கலச திருமஞ்சனம், நண்பகல் 12 மணிக்கு பூா்ணாஹுதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வியாழக்கிழமை (மே 21) மாலை 4 மணியளவில் புஷ்ப யாகம் ஹோமம், இரவு 8 மணிக்கு தீா்த்தம் பிரசாதம் விநியோகம் நடைபெற உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் கோடைத் திருநாள் உற்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



