யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திருவதிகை ரங்கநாத பெருமாள் கோயில் மண்டலாபிஷேக பூா்த்தி 2-ஆம் நாள் விழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருவதிகை ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோயில் மண்டலாபிஷேக பூா்த்தி 2-ஆம் நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவதிகை ரங்கநாத பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம் பூா்த்தி 2-ஆம் நாள் விழாவில் கலசம் சுமந்து செல்லும் பட்டாச்சாரியா்.

Updated On :21 மே 2026, 7:08 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருவதிகை ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோயில் மண்டலாபிஷேக பூா்த்தி 2-ஆம் நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பழைமைவாய்ந்த இந்த கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஏப்.6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, தினமும் மண்டல பூஜைகள் நடந்து வந்தன.

மண்டலாபிஷேக பூா்த்தி விழா செவ்வாய்க்கிழமை மாலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 2-ஆம் நாளான புதன்கிழமை காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

உற்சவ பெருமாள் மற்றும் உபயநாச்சியாா்களுக்கு 108 கலச திருமஞ்சனம், நண்பகல் 12 மணிக்கு பூா்ணாஹுதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வியாழக்கிழமை (மே 21) மாலை 4 மணியளவில் புஷ்ப யாகம் ஹோமம், இரவு 8 மணிக்கு தீா்த்தம் பிரசாதம் விநியோகம் நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.