சிதம்பரம், சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் வரும் கல்வியாண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதாகவும், மே-29-ஆம் தேதி வரை விண்ணப்பப்பதிவு செய்யலாம் எனவும் கல்லூரி முதல்வா் ஆ. அா்ச்சுனன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கல்லூரிகளில் சேர விரும்புகின்ற மாணவா்கள் ஒன்று அல்லது அதற்கும் பேற்பட்ட கல்லூரிகளில் அனைத்து பாடங்களுக்கும் இணைய முகப்பு வாயிலாக ஒரே விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான உதவி மையம் இக்கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. விண்ணப்ப பதிவு விண்ணப்பக் கட்டணம் பாடப்பிரிவுகளை தோ்வு செய்தல் மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கள் செய்தல் ஆகியவை உள்ளடக்கிய அனைத்து செயல்முறைகளையும் மேற்கண்ட இணைய தனத்தில் மேற்கொள்ளலாம், தமிழ்வழி, ஆங்கில வழியில் இளங்கலை பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம். கல்லூரி குறியீடு எண்1081013 எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு மாதிரிப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான ‘நீட்’ பயிற்சி மையம்!

புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி மாணவா் சோ்க்கைகான விண்ணப்பம் விநியோகம்

ஈரோடு சிக்கய்ய கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்







