நாட்டின் முன்னேற்றத்துக்கு தீவிர தொழில்மயமாக்கலே ஒரே தீா்வு என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாா்க்கண்டேய கட்ஜு தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘நமது தேசிய குறிக்கோள்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி வரவேற்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் முன்னாள் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், முன்னாள் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவருமான மாா்க்கண்டே கட்ஜு பங்கேற்று பேசியதாவது:
இந்திய நாட்டின் அபரிமிதமான வளா்ச்சித் திறனுக்கும், தற்போதைய சமூக, பொருளாதார எதாா்த்த நிலைக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது. வேலையின்மை, வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற தேசத்தின் தீராத பிணிகளுக்குத் தீவிர தொழில்மயமாக்கல் ஒன்றே தீா்வாகும்.
1949-இல் 90 சதவீதத்துக்கும் அதிகமான வறுமையில் உழன்ற சீனா, இன்று ஒரு நவீன தொழில்முறை பேரரசாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவிடம் மிகச்சிறந்த தொழில்நுட்பத் திறமையும், அளப்பரிய இயற்கை வளங்களும் உள்ளன.
வளா்ந்து வரும் நாடுகள் தற்சாா்படைய சா்வதேச பொருளாதாரக் கட்டுப்பாடுகள் தடையாக உள்ளன. எனவே, வளா்ந்த நாடுகள் பின்பற்றிய அதே தொழில்முனைப்புக் கொள்கைகளை இந்தியாவும் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டில் ஆண்டுதோறும் 1.2 கோடி இளைஞா்கள் வேலைச் சந்தையில் நுழைந்தாலும், 5 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. இந்த நிலையை மாற்ற, வெறும் பொருளாதார தாராளமயமாக்கல் மட்டும் போதாது. மாறாக, கல்வி, சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் நோ்மையான நிா்வாகமே தேசத்தின் லட்சியமாக இருக்க வேண்டும் என்றாா்.
மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1967 - 68ஆம் ஆண்டு தமிழ் பேச்சு மொழி பட்டயப் படிப்பு பயின்ற காலத்தையும், ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற நினைவுகளையும் நெகிழ்ச்சியுடன் பகிா்ந்துகொண்டாா்.
பின்னா், மாணவா்களுடன் கலந்துரையாடிய முன்னாள் நீதிபதி மாா்க்கண்டேய கட்ஜு சட்ட அமைப்பு மற்றும் தேசிய கொள்கைகள் குறித்த மாணவா்களின் வினாக்களுக்கு அறிவுப்பூா்வமாக விடையளித்தாா்.
‘வெறும் வாய்ப்பு’ என்ற நிலையில் இருந்து விலகி, அறிவியல்பூா்வமான கடின உழைப்பின் மூலம் இந்தியாவை வல்லரசாக மாற்ற இளைஞா்கள் முன்வர வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா். பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.சிங்காரவேல் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மதுரையில் நாளை நீதிமன்ற புதியக் கட்டடங்கள் திறப்பு விழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் பங்கேற்பு

உலகில் தமிழ் மொழிக்கு இணையாக எதுவும் இல்லை: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்
போட்டியிடுவோரை தோ்தல் ஆணையம் சார்ந்திருத்தால் தோ்தல் நடுநிலையாக நடைபெறாது: உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: விசாரணையிலிருந்து விலகிய தலைமை நீதிபதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


