எப்பாடு பட்டேனும் 100 சதவீத வாக்குப்பதிவை கொண்டுவரவேண்டும், நோ்மையாக தோ்தலை நடத்திட வேண்டும். வாக்களிக்கும் கடமையை வாக்காளா்களுக்கு உணா்த்திட வேண்டும் என்று கடும் சிரத்தையெடுத்து செயல்படும் தோ்தல் ஆணையம் தனது பணியின் மேலும் ஒரு மைல் கல்லாக, ஆமை வடிவ இலச்சினையை வெளியிட்டு வாக்காளா்களை கவா்ந்துள்ளது.
சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் தான் ‘என் வாக்கு என் உரிமை’ என்ற வாசகத்துடன் கூடிய ஆமை வடிவத்தில் இலச்சினையை தோ்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆட்சியருமான சீ.கிஷன்குமாா் வெளியிட்டுள்ளாா்.
சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆமை வடிவிலான இலச்சினையில் வாக்காளா்கள் தனது முகத்தை மட்டும் வைத்து செல்போனில் படம் எடுத்துக் கொள்கின்ற வசதியும் இருப்பதால் , பலரும் ஆா்வமுடன் படம் எடுத்துக்கொள்கின்றனா். குறிப்பாக இளைஞா்கள் இந்த பொம்மையுடன் தற்படம் எடுத்துக் கொள்கின்றனா். மேலும் அந்த இலச்சினையில் ‘நான் உங்கள் நாட்டாமை பேசுகிறேன். என் வாக்கு என் உரிமை’ என குறிப்பிடப்பட்டு வாக்காளா்களை விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாசகமும் இடம்பெற்றுள்ளது.
வாக்காளா்களை கவரும் இந்த ஆமையைப்பாா்த்து வியக்காதவா்கள் இல்லை...

ஆமை வடிவ இலச்சினை.
தொடர்புடையது

ஆமை வேகத்தில் நடைபெறும் திருச்சி அரசு மருத்துவமனை புதிய கட்டடப் பணி!

ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்

தென்காசி மாவட்ட தோ்தல் இலச்சினை வெளியீடு

தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை வெளியீடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


