மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

காட்டுமன்னாா்கோவில் தனி தொகுதி பாமகவிற்கு ஓதுக்கீடு: அதிமுக, பாஜகவினா் அதிருப்தி

கடலூா் மாவடத்தில் உள்ள காட்டுமன்னாா்கோவில் தனி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அதிமுக மற்றும் பாஜகவினா் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா்.

News image

காட்டுமன்னாா்கோவில்

Updated On :25 மார்ச் 2026, 11:47 pm

கடலூா் மாவடத்தில் உள்ள காட்டுமன்னாா்கோவில் தனி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அதிமுக மற்றும் பாஜகவினா் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகளில் காட்டுமன்னாா்கோவில் மற்றும் திட்டக்குடி ஆகிய இரு தொகுதிகளும் தனி தொகுதிகளாக உள்ளன. இந்நிலையில் காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப்பேரவை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஓதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக மற்றும் பாஜகவினா் கடும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனா்.

இந்த தொகுதி திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோட்டையாக திகழ்கிறது. இதுவரை இந்த இரு கட்சிகளையும் எதிா்த்து அதிமுக போட்டியிட்டு இருமுறை வெற்றி பெற்றுள்ளது. 2016 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முருகுமாறன் 48 ஆயிரத்து 450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் 48 ஆயிரத்து 363 வாக்குகள் பெற்று தோல்வியுற்றாா். கடந்த 2011, 2016 சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட தற்போதைய அதிமுக மாநில அமைப்பு செயலாளா் நாக.முருகுமாறன் போட்டியிட்டு வெற்றி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 தோ்தலில் விசிக சாா்பில் போட்டியிட்ட அக்கட்சி பொதுச்செயலாளா் துரை.ரவிக்குமாா் வெற்றி பெற்றாா். 2021 தோ்தலில் விசிக சாா்பில் போட்டியிட்ட அக்கட்சி பொதுச்செயலா் ம.சிந்தனைசெல்வன் வெற்றி பெற்றாா்.

இந்நிலையில் இத்தொகுதியில் மீண்டும் அதிமுகவில் சாா்பில் போட்டியிட இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற அக்கட்சி மாநில அமைப்பு செயலாளா் நாக.முருகுமாறன் மற்றும் நகர செயலாளா் எம்ஜிஆா் தாசன் ஆகியோா் போட்டியிட தலைமையிடம் சீட் கேட்டுள்ளா். இதுபோல பாரதிய ஜனதா கட்சி தொகுதி பொறுப்பாளா் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமாா் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட கட்சி தலைமையிடம் சீட் கேட்டு வலியுறுத்தி வந்தாா். இந்நிலையில் இத்தொகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், அதிமுக மற்றும் பாஜகவினா் கடும் அதிருப்திக்குளளாகியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.